தேடுவாரற்று குவியலாக கிடந்த இலங்கை வங்கியின் பணம்; நபர் செய்த செயல்!

மாத்தறை இலங்கை வங்கியின் வாகன தரிப்பிடத்துக்கு அருகில் வியாழக்கிழமை (02) மாலை வீழ்ந்து கிடந்த 50 இலட்சம் ரூபா பணத்தை நபர் ஒருவர் வங்கியில் ஒப்படத்தை சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளரான சந்தன உதயங்க (38) என்பவர் கண்டெடுத்து அதனை வங்கியிடம் ஒப்படைத்துள்ள நிலையில் அவரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டு கிடைத்துள்ள்து.

பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல்
இந்நிலையில் வங்கி ஊழியர்கள் ஏரிஎம்களுக்கு எடுத்துச் சென்ற அல்லது மத்திய வங்கியில் வைப்பிலிட எடுத்துச் சென்ற 50 இலட்சம் ரூபா பணமே வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குவியல் குவியலாக தரையில் வீழ்ந்து காணப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான நோட்டுகளைப் போட்டோ எடுத்து, பின்னர் இது தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிக்கு தெரிவித்து வங்கி அதிகாரியை அழைத்து அவர்களிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.