யாழ்ப்பாணத்தில் ‘பட்டா’ வாகனம் ஒன்றிற்குள் 3 இளைஞர்களுடன் பிடிபட்ட மாணவி!

யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்குப் பகுதியில் ‘பட்டா’ வாகனத்துக்குள் நிர்வாண நிலையில் இருந்த 23 வயதான தாதிப் பயிற்சி மாணவி மற்றும் 3 இளைஞர்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றைய தினம் அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் தமது பகுதிக்கு அருகில் உள்ள வீதி ஓரமாக சந்தேகத்துக்கிடமான முறையில் பட்டா வாகனம் ஒன்று நின்றுள்ளதை அவதானித்துள்ளார்கள்.

மேலும் குறித்த வாகனத்துக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியால் சென்றவர்கள் தமது நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு குறித்த வாகனத்தை நெருங்கிச் சென்றுள்ளனர்.

வாகனத்தின் உள்ளே நிர்வாண நிலையில் 3 ஆண்களும் பெண் ஒருவரும் காணப்பட்டுள்ளனர்.

அவர்களை ஆடைகளை அணிவிக்கச் செய்த பின் கீழே இறக்கி விசாரணை செய்த போது குறித்த பெண் தாதிப் பயிற்சி மேற்கொள்ளும் மாணவி எனவும் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

வாகனச் சாரதியும் அவனது இரண்டு நண்பர்களும் யாழ் நகரப்பகுதியில் வாடகை வாகன சேவையில் ஈடுபடுபவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர்.