யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்த 47 குழந்தைகள்!

யாழ்ப்பாண போதான வைத்திசாலையில் கடந்த ஆண்டு (2023) 5,510 குழந்தைகள் பிறந்தாகவும், அவற்றில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 1052 பேர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்களில் 238 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.