உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகத்தின் பேரில் 30பேர் திடீர் கைது

இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடர்ச்சியாக சஹரானின் அடைப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் 30 இளைஞர்களை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர்.

காத்தான்குடி பகுதியில் இன்று அதிகாலை(01.03.2024) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவலைப்பில் மேற்படி இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

காத்தான்குடி பொலிஸார்
காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டமொன்றை நடத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஸஹ்ரான் ஹாசிமின் சாகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் அதிகாலையில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் கூறியுள்ளனர்.