இலங்கையில் இன்று முதல் புதிய எரிபொருள் விற்பனை

இலங்கையின் எரிபொருள் சந்தையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் விற்பனை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Shell-RM Parks Inc நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் நேற்று (21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அதன்படி, இன்று (22) முதல் Shell-RM Parks Inc நிறுவனம் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளது.இதேவேளை, 63 வருடங்களின் பின்னர், ஷெல் நிறுவனம் இலங்கையின் எரிசக்தி துறையில் மீண்டும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.