வடமாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரின் மோசமான செயல்! சர்ச்சை புகைப்படம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் உள்ள உயர் அதிகாரியொருவர் அலுவலக நேரத்தில் நித்திரை கொள்ளும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக வட மாகாண கல்வியில் பல்வேறு முறையற்ற செயற்பாடுகள் இடம் பெற்று வருவதாக பல்வேறு தரப்பினர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இவ்வாறு உயர் அதிகாரி ஒருவர் அலுவலகத்தில் படுத்து உறங்கு புகைப்படம் அம்பலமாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உயர் அதிகாரிகள் இவ்வாறு தூங்கினால் வடக்கு கல்வியும் தூக்கத்தில் இருப்பதையே காட்டுகிறது.