சிறுமியை கத்தியால் குத்திவிட்டு சிறிய தந்தை தன்னைத்தானே எரியூட்டி தற்கொலை!!

அக்கரைப்பற்று – பட்டியடிப்பிட்டி பகுதியில் சிறுமியொருவரை அவரின் சிறிய தந்தை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். 14 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். நேற்று காலை 5.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் கழுத்தில் கத்தியால் குத்திய சிறிய தந்தை, பின்னர் தன்னைத் தானே எரியூட்டிக்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறுமியின் சிறிய தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியமையே இந்த சம்பவத்தின் பின்னணி என பொலிஸார் தெரிவித்தனர்.