நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, சந்திவெளி பகுதியில் தோணி கவிழ்ந்து உயிரிழந்தவரின் உடலை பொலிஸார் இன்று கண்டெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் சந்திவெளி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த யோகராசா (21 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சம்பவத்தில் உயிரிழந்தவர் நேற்றைய தினம் திகிலிவட்டை கிராமத்திலுள்ள தனது நண்பரின் மரண வீட்டிற்கு செல்வதற்காக தனது இரு நண்பர்களுடன் சந்திவெளி ஆற்றைக்  கடக்க முற்பட்டபோது தோணி கவிழ்ந்துள்ளது.

இதன்போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும் உயிர் தப்பியுள்ளனர்.

இதனையடுத்து சடலம் இன்று ஆற்றில் கரையொதுங்கிய நிலையில் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.