மூவரின் உயிரைக் காப்பாற்றி – உயிர் நீத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு!!

மாதம்பே, பகுதியில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அவருக்கு பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய பொலிஸ் காண்ஸ்டபிளான தசநாயக்க பதிருன்னகலாகே டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.