திடீரென பற்றிய ஏ.ரி.எம் -அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள்!!

களுபோவில பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரப் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்து, கொஹுவெல பொலிஸார் மற்றும் தீ அணைப்பு பிரிவினரின் உதவியுடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்து காரணமாக வங்கியின் ஏ.டி.எம் இயந்திரமும் பாதிப்படைந்துள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ விபத்திற்கான காரணம் மற்றும், விபத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கொஹுவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.