காலைக்கதிர் பத்திரிகையின் செய்தியாளர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

காலைக்கதிர் பத்திரிகையின் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் நேற்று அதிகாலை தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியும் யாழ்ப்பாண நகரில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாண ஊடகவியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம் நாளை முறபகல் 10 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இடம்பெறுகிறது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவளிக்குமாறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் உள்பட அனைத்து தரப்புகளுக்கும் ஏறபாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.