காதலியை தேடிச் சென்ற இராணுவ சிப்பாய்க்கு நேர்ந்த கதி! மரத்தில் கட்டி வைத்து அடி

திருகோணமலை – மட்கோ மஹாமாயபுர பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த இராணுவ சிப்பாயை பொது மக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலையில் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலை – திஸ்ஸ கடற்படை முகாமில் கடமையாற்றும் அனுராதபுரம், மான்கமுவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சிப்பாய்க்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தொலைபேசி மூலம் பெண் ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி, அவருடைய வீட்டுக்கு குறித்த சிப்பாய் சென்றுள்ளார். இதன்போது குறித்த பெண்ணின் கணவர் மறைந்திருந்த நிலையில் சிப்பாயை அயலவர்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்ததாக தெரியவருகின்றது.

இதையடுத்து வீடொன்றின் மரத்தில் நபர் ஒருவரை கட்டி வைத்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மரத்தில் கட்டப்பட்டிருந்த நபரை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.