ஒரு நிமிடத்துக்கு 3 கோடி சம்பளமா?. யார் அந்த நடிகர்?

மறுபடியும் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிப்பதற்கு பதிலாக நான் என் கையை அறுத்துக்கொள்வேன் என கூறிவந்த டேனியல் கிரேக் தற்போது ஒருவழியாக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்க டேனியல் 50 மில்லியன் பவுண்டுகள் சம்பளமாக பெறவுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் இது 450 கோடி ரூபாய்க்கும் அதிகம்.

உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் கடந்த 3 ஆண்டுகளாக வெளியாகவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு டேனியல் கிரேக் நடிப்பில் வெளியான ஸ்பெக்ட்ரா, ஜேம்ஸ் பாண்ட் பட வரிசைகளில் இறுதியாக வந்த படமாகும்.

2 மணி நேரம் 20 நிமிடம் இந்த படத்தின் ரன்டைம் என கூறப்படும் நிலையில், ஒரு நிமிடத்திற்கு 3 கோடி ருபாய் வீதம் டேனியல் சம்பளம் வாங்கவுள்ளார். அது மட்டுமின்றி படத்தின் லாபத்திலும் அவருக்கு பங்கு உள்ளது. இப்படம் வரும் டிசம்பர் மாதம் துவங்கி தொடர்ந்து 5 மாதங்களுக்கு ஷூட்டிங் நடைபெறவுள்ளது.