யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த பேருந்திலிருந்து 2 கிலோ 34 கிராம் கஞ்சா மீட்கப் பட்டது என்று வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தப் பேருந்து நேற்றுக் காலை 10 மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டது. வவுனியா பொலிஸ் நிலையப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். பேருந்தில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டது. அதை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த பேருந்திலிருந்து 2 கிலோ 34 கிராம் கஞ்சா மீட்கப் பட்டது என்று வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தப் பேருந்து நேற்றுக் காலை 10 மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டது. வவுனியா பொலிஸ் நிலையப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். பேருந்தில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டது. அதை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.