காதலனை நம்பிச் சென்ற மாணவியை சீரழித்த நண்பர்கள்: அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தின் திருப்பூர் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கியதாக கூறி 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூரில் குடியிருக்கும் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த மே மாதம் 29 ஆம் திகதி மாயமானதாக கூறப்படுகிறது.

குறித்த மாணவி தொடர்பில் தீவிரமாக தேடியும் பலனில்லாதது கண்டு, அவரது பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில்,மாயமான மாணவி திருச்சி மாவட்டத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து திருச்சிக்கு விரைந்த பொலிசார், அந்த மாணவியை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

அதில், திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் குறித்த மாணவியைக் காதலித்துவந்தது பொலிசாருக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் கடந்த 29 ஆம் திகதியன்று, மாணவியின் வீட்டில் பெற்றோர் யாரும் இல்லாத நேரம் பார்த்து, அங்கு சென்ற நாகராஜ், மாணவியிடம் ஆசைவார்த்தைகளைப்

பேசி, அவருடன் காங்கேயம் பகுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு, அவரது நண்பர்களான ஜீவா, மணிகண்டன் மற்றும் 17 வயது நிரம்பிய ஒரு சிறுவன் ஆகியோரின் உதவியுடன் மாணவியை திருச்சிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.

திருச்சியில் வைத்து நாகராஜ் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நாகராஜுக்கு உதவியதாக இருந்த அவரது நண்பர்கள் மூவரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

அந்த நால்வரின் மீதும் “போக்ஸோ” சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அதில் மூவரை கோவை மத்திய சிறையிலும், 17 வயதான சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் தற்போது அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.