வவுனியாவில் இடியப்பம் வாங்கிச் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வவுனியாவிலுள்ள சைவ உணவகமொன்றில் இன்று காலை நபரொருவர் இடியப்ப பொதியொன்றை கொள்வனவு செய்துள்ளார்.

இந்த நிலையில் அவர் குறித்த பொதியை வீட்டில் சென்று திறந்து பார்த்த போது கொத்தாக தலைமுடி அதிலிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த சைவ உணவத்திற்கு மீண்டும் சென்ற அந்த நபர் உணவில் கொத்தாக தலைமுடி இருப்பதை காட்டியுள்ளார்.

இந்த நிலையில் உணவகத்தின் முகாமையாளர் அந்த நபரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

எனினும், உணவகங்களில் பேணப்பட வேண்டிய விதிமுறைகள் இந்த உணவகத்தில் பேணப்படுவதில்லை என குற்றச்சாட்டுக்களை பொதுமக்கள் முன்வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.