யாழில் சற்று முன் இடம்பெற்ற விபத்து….!

யாழ் உரும்பிராய் பலாலி வீதியில் இன்று காலை விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நேருக்கு நேர் வந்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

அண்மைக்காலமாக குடாநாட்டில் இவ்வாறான விபத்துச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.