ரணிலின் சகோதரரின் -தொலைக்காட்சிக்கு சீல்!!

தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசி்ங்கவின் சகோதரருக்குச் சொந்தமான ரிஎன்எல்(TNL) தொலைக்காட்சி தொலைதொடர்பு ஆணைக்குழுவினால் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று
அந்தத் தொலைக்காட்சி முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

குறித்த தொலைக்காட்சியில் கடந்த வாரம் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஆற்றிய உரை தொடர்பில் கடும் விமர்சனம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.