பொலிஸ் நிலயத்தினுள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான 15 வயதுச் சிறுமிக்கு நடந்த கதி!!

நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில் சிறுவர் நன்னடத்தை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெலிஓய காவல் நிலையத்தினுள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் 15 வயது சிறுமி குறித்த முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமி தடுத்து வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் – அசோக குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இருந்து குறித்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

இது தொடர்பில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் காவற்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் , சம்பவம் தொடர்பில கைது செய்யப்பட்டுள்ள காவற்துறை கான்டபிலை எதிர்வரும் 13ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.