கொழும்பு வான் பரப்பில் நடந்த அதிசயம்…!

கொழும்பு வான்பரப்பில் திடீரென மாற்றம் எற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் முகில் கூட்டம் திடீரென கறுப்பு நிறத்தில் பூமியை நோக்கி வருவது போன்று காட்சியளித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.இதுவொரு திகில் நிறைந்த காட்சியாக இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கையில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது.

பருவ மழை பெய்ய தொடங்கியுள்ளமையால் எதிர்வரும் நாட்களில் நாட்டிலும் அதனை சூழவுள்ள பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், கொழும்பு வான்பரப்பில் மாறுபட்ட காட்சி தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.