பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் முற்றாக சேதம்!!

தலவாக்கலை – வட்டகொட, மடக்கும்புர புதிய மிடில் பிரிவில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில், உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனவும், வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரண்டு வீடுகளிலும் உள்ள 11 பேர் தற்காலிகமாக அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக இப்பகுதிக்கான மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு, திருத்த பணிகளை மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகமும், பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.