இலங்கையில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 11 மணித்தியாலங்களில் 3666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு முன்தினம் இரவு 10 மணியில் இருந்து நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 11 மணித்தியாலங்களிலேயே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த கைது நடவடிக்கையில் 17687 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் 3666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடிபோதையில் வாகனம் செலுத்தியமை, பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பிலும் அவசியமாக இருந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.