தாய்க்கும் மகனுக்கும் – கண்டி வீதியில் நடந்த பரிதாபம்!!

மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் தாயும், இரண்டு வயதுடைய ஆண் குழந்தையும் உயிரிழந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து குருநாகல் – கண்டி வீதி நுகவெல பிரதேசத்தில் இன்று காலை நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதை அடுத்து, தாய் மற்றும் குழந்தை வீழ்ந்தனர். எதிர் திசையில் பயணித்த பேருந்துடன் மோதி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.