பத்திரிகை ஆசிரியர் கொலை: சி.சி.ரி.வி.யில் சிக்கிய கொலையாளிகள்!!

காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் உருவம் சி.சி.ரி.வி. கமராவில் கண்டறியப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் ரைசிங்காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரியை நேற்று லால் சவுக் என்ற இடத்தில் உள்ள பத்திரிகை அலுவலகத்தில் இருந்து மாலை வெளியே வந்த போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தப்பியோடினர்.

இந்நிலையில் காஷமீர் பொலிஸார் விசாரணை நடத்தி நேற்று சி.சி.ரி.வி. பதிவினை வெளியிட்டனர். அதில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் சுஜாத் புகாரியை துப்பாக்கியால் சுட்டு தப்பியோடியமை தெரியவந்துள்ளது.

கமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.