கிளிநொச்சி பரவிபாஞ்சானில் வெடி பொருட்கள் மீட்பு (படங்கள்)

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் தனியார் காணியில் உள்ள கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காணியின் உரிமையாளர் தனது கிணற்றினை நேற்றுமுதல் துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதன்போது குறித்த கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மற்றும் பெட்டிகளில் அடைக்கப்பட்ட வெடி மருந்துகள் என மீட்கப்பட்டு வருகின்றன.

மிகவும் ஆழமான குறித்த கிணற்றில் நேற்றும் இன்றும் பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இப் பிரதேசம் விடுதலை புலிகளின் முக்கய பிரதேசமாக பேசப்பட்டு வந்ததுடன், நீண்டகாலமாக படையினர் குறித்த பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

தொடர்ந்தும் மக்கள் போராட்டம் மேற்கொண்டதை அடுத்து படிப்படியாக குறித்த பகுதிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு மக்கள் குடியேறி வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் அடைக்கப்பட்ட பெட்டிகள் என மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.