அக்கரைப்பற்றில் சற்று முன்னர் விபத்துக்குள்ளான மகிழுந்து!

இலங்கையின் கிழக்கே அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மகிழுந்து ஒன்று கடும் சேதத்திற்குள்ளானதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

பொத்துவில்-தாண்டியடி பிரதான வீதியிலேயே இந்த விபத்து இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.மகிழுந்து ஒன்று சாலையை விட்டுத் தடம்புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டபோதும் எவ்வித பாரதூரமான சேதங்களும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

மகிழுந்தை ஓட்டிவந்த ஓட்டு நரின் அதிவேகமே விபத்திற்குக் காரணமென பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதுதொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்