திருடர்களை மடக்கிப் பிடித்த- பிரதேசசபை உறுப்பினர்!!

ஆள்கள் இல்லாத வீடுகளுக்குள் புகுந்து நீரிறைக்கும் இயந்திரம் மற்றும் பெறுமதியான பொருள்களை வாகனத்தில் வந்து திருடிச் சென்ற வியாபாரிகளை, துரத்திச் சென்று அவர்களை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார் பிரதேச சபை உறுப்பினர்.

இந்தச் சம்பவம் வேலணையில் உள்ள சோளாவத்தை கிராமத்தில் நடந்துள்ளது.

வியாபாரிகளை மண்டைதீவுச்சந்தி வரை உந்துருளியில் துரத்திச்சென்று, அங்குள்ள பொலிஸ் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்து.