யாழ்ப்பாணத்தில்- நாளை மின்தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

காலை- 08.30 மணி முதல் மாலை- 5 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடைப்பட்டிருக்கும்.

மண்டைதீவு, மண்டைதீவு இலங்கைக் கடற்படை முகாம், அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்கும்பான் தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை,மண்கும்பான் கடற்படை முகாம், வேலணையின் ஒரு பகுதி, சோலாவத்தை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.