தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக அரசு, நாளொன்றுக்கு 17 கோடி ரூபாவுக்கு மேலான இழப்பைச் சந்திக்கிறது என்று தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார்.
கடமைகளைப் புறக்கணிக்கும் தபால் ஊழியர்கள் பேச்சு மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும். ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும்.
தபால் ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. இவற்றுக்கு ஒரு மாத காலத்திற்குள் ஏற்றுக்கொள்ளத் தக்க தீர்வு தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.