டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதின! – ஒட்டுசுட்டானில் இளைஞர் படுகாயம்!!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடந்துள்ளது.

ஒட்டுசுட்டானைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த இளைஞர் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்பாகப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பருடன், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியது என்று கூறப்படுகின்றது.
விபத்துத் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.