மன்னார் பிரதான பாலத்தடி கடற்பகுதியில் இன்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் மர்மப்பொருள் ஒன்று சிக்கிய நிலையில் குறித்த பொருள் பிள்ளையார் சிலை என தெரிய வந்துள்ளது.
மன்னார் பிரதான பாலத்தடி கடற்கரையில் இன்று வியாழன் (21) காலை மீனவர் ஒருவர் மீன் பிடிக்க கடலில் போட்டிருந்த வலையை கடலில் இருந்து எடுத்துக்கொண்டிருந்தார்.
இதன் போது குறித்த வலையில் மர்ம பொருள் ஒன்று சிக்கிய நிலையில் குறித்த மீனவர் மர்மப்பொருளை மீட்டு கடற்கரைக்கு கொண்டு சென்றார்.
இதன் போது பலர் அதனை பார்க்க ஒன்று கூடியனர். இதன் போது அந்தப் பொருளில் உள்ள மண்ணை அகற்றிய நிலையில் குறித்த மர்மப்பொருள் பிள்ளையார் சிலை என தெரிய வந்துள்ளது.
இப்பிள்ளையார் சிலை பழைமை வாய்ந்ததா?அல்லது அண்மைக்காலங்களாக மன்னாரில் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சிலையா? என்பது தொடர்பில் மீனவர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.