பட்டப்பகலில் மாத்தறை நகரில் நடந்த பயங்கரம்….!! (வீடியோ )

மாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பான சிசிரிடி காணொளியை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.அந்தப் பகுதியிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளையிட வந்த கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டது.துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பொலிஸார் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.முகத்தை மறைத்து துப்பாக்கி சகிதம் வந்த கும்பல் ஒன்று கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கியை காட்டி தங்க நகை விற்பனை நிலைய ஊழியர்களை அச்சுறுத்தி கொள்ளையடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த வேளையில் பொலிஸார் மடக்கி பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.

இரண்டு பேர் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அருகில் மற்றுமொரு நபர் அங்கு வந்த பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.இந்த அனர்த்தம் தொடர்பில் அருகிலுள்ள சிசிரிவி காணொளியில் பதிவான காட்சிகளை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.+