இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட விசித்திர உயிரினம்!!

பதுளை தெல்பத்தை தோட்டத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளி ஒருவரின் வீட்டு தோட்டத்தில் இருந்து விசித்திரமான உயிரினம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபரின் வீட்டு தோட்டத்தில் இருந்து கொக்கோ மரத்தின் இலையிலிருந்து இந்த விசித்திரமான உயிரினம் உருவாகியுள்ளது. கொக்கோ மரத்தின் இலையை போன்ற உயிரினம் ஒன்றே அடையாளம் காணப்பட்டுள்ளது.

தனது வீட்டு தோட்டத்தினை துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது கொக்கோ மரத்தின் இலையை ஒத்ததாக ஓர் உயிரினம் அசைவதை அவதானித்த நபர் இந்த உயிரினத்தை அடையாளம் கண்டுள்ளார்.

தற்போது குறித்த உயிரினத்தை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.