யாழ் நகரிலுள்ள வீடொன்றில் வாள்களுடன் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளது
யாழ் இராமநாதன் வீதி கலட்டி ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
முகத்தை துணிகளால் கட்டியபடி மூன்று மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன்
சென்ற ஆறு நபர்கள் குறித்த வீட்டிற்கும் புகுந்து இங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்
தொடர்ந்து வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்தும்இங்கிருந்த கணினி மற்றும் கதிரைகளை குறித்த கும்பல்
சேதப்படுத்தியதுடன் அவற்றை தீ வைத்தும் கொழுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது
இச்சம்பவம் தொடர்பில் யாழ் பிராந்திய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்