முதலமைச்சர் கோரினால் அமைச்சுப் பதவியினை உடனடியாக கைவிடத் தயார்… அமைச்சர் அனந்தி அதிரடி அறிவிப்பு!!

முதலமைச்சர் கோரினால் தமது அமைச்சுப் பதவியினை உடனடியாக கைவிட தயாராக இருப்பதாக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்றையதினம் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய அனந்தி சசிதரனின் அமைச்சின் விடயப்பரப்பு மீள கையளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமைச்சர் அனந்தி சசிதரன் தமது பதவியிலிருந்து விலகுவதற்கு தான் எப்போதும் ஆயத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.