சிம்லா அருகே மலைப்பாதையில் பேருந்து விபத்து: 40-க்கும் மேற்பட்டோர் பலி?

இமாசல்பிரதேச மாநிலம் சிம்லாவிற்கு அருகே, குறுகிய மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்குள்ளான பேருந்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

உயிரோடு இருப்பவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இமாலய மலைப் பகுதிகளில் அபாயகரமான, குறுகிய சாலைகளில் இது போன்ற விபத்துகள் ஏற்படுவது வழக்கத்திற்கு மாறானது அல்ல.