கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடி 13 லட்சம் ரூபா பெறுமதியான கோக்கேனை வயிற்றுக்குள் வைத்துக் கொண்டு, இலங்கை வந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
58 கொக்கேன் உருண்டைகளை விழுங்கியவாறு இலங்கை வந்த பிரேசில் நாட்டவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கோக்கேன் உருண்டைகளை வெளியே எடுப்பதற்காக நீர்கொழும்பு வைத்தியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பிரேசிலில் இருந்து டோஹாவுக்கு சென்று அங்கிருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இந்த நபர் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வரை இன்று முதல் 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.