தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் தற்கொலை யாழில் சம்பவம் (வீடியோ)

யாழ்ப்பாணம்
தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலைசெய்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணியளவில் மல்லாகம் பகுதியில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த நசீர் (வயது 25) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த சில தினங்களாக வீட்டுக்காரர்களுடன் ஏதோ பிரச்சினைகளுடன் இருந்து வந்ததுடன், வீட்டுக்காரர்களுடன் தொலைபேசியில் கடுமையாக கதைத்ததாகவும் சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவதானித்துள்ளனர்.

இந்நிலையில், மல்லாகம் பகுதியில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட வேளையிலேயே தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
சம்பவத்தின் பின்னர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தில் நின்ற பொலிஸார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்த வேளையிலேயே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது