நள்ளிரவில் அதிகரித்த எரிபொருள் கட்டணங்கள்: புதிய கட்டண விபரம்!

எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது.

அதன்படி ஒக்டைன் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 8 ரூபாவினாலும், 95 ஒக்டைன் வகை பெற்றோல் 8 ரூபாவினாலும், அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில் ஒக்டைன் 92 வகை பெற்றோலின் புதிய விலை 145 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோலின் புதிய விலை 155 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை டீசலின் விலை 9 ரூபாவினாலும், சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.

எனவே, டீசலின் புதிய விலை 118 ரூபாவாகவும், சூப்பர் டீசலின் புதிய விலை 129 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், ஐஓசி நிறுவனத்தினால் விலை அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.