முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் அபாயகரமான வெடிகுண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்கால் மேற்கு கிராமத்தில் வசிக்கும் தாய் ஒருவர் தனது வீட்டு முற்றத்தில் மரம் ஒன்று நடுவதற்காக கிடங்கு ஒன்றை தோண்டியுள்ளார். இதன்போது ஒரு பெரிய குண்டு மீட்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த மர்ம பொருள் அபாயகரமான வெடிகுண்டு என்று அறியாத அந்த தாய் குறித்த குண்டை எடுத்துச் சென்று வேலி ஓரத்தில் வைத்துவிட்டு அயலவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த மர்ம பொருள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று பகல் அங்கு சென்ற பொலிஸார் குறித்த மர்மப் பொருள் அபாயகரமான வெடிகுண்டு என்று உறுத்திப்படுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த வெடிகுண்டை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.