மக்களை வியப்பில் ஆழ்த்திய திருமணம்

இலங்கையில் நடந்த திருமணம் வைபவம் ஒன்று நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.

தற்போது உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் காற்பந்து மீதான தீவிரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜோடி ஒன்று தமது திருமணத்தை செய்துள்ளது.

கலாச்சார ஆடைகளை அணியாது, காற்பந்து போட்டியாளர்களாக மைதானம் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

எனினும் திருமணம் செய்து கொண்டவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகாத நிலையில் அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.