சாவகச்சேரியில் அதிகாலை பயங்கரம் – வீடொன்றில் அச்சுறுத்திக் கொள்ளை

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் பெரும் தொகை பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவக்சேரி, மீசாலை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வீட்டில் 12 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தங்க நகைகளைத் திருடிய கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிய நிலையில் வந்த 4 பேர் கொண்ட குழுவால் கொள்ளையிடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்களை வாளை காட்டி அச்சுறுத்திய நிலையில், 1,233,500 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.