கொழும்பில் துப்பாக்கிச் சூடு! – இருவர் உயிரிழப்பு – பதட்ட நிலைமை

கொழும்பு ஜம்பட்ட வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவருகின்றது.

பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 58 வயதுடைய ஆண் ஒருவரும், 50 வயதுடைய பெண் ஒருவருமே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

துப்பாக்கிச் சூட்டை அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது என்றும், பெரும் எண்ணிக்கையான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. துப்பாக்கிச் சூடு மேற்கொண்டவர்கள் தொடர்பான தகவலும் வெளியிடப்படவில்லை. பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.