வாகன விபத்தில் இருவர் படுகாயம்!! (படங்கள்)

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று காலை மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் வேகமாக சென்ற சிறிய ரக வாகனம் வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காத்தான்குடியில் இருந்து கல்முனை நோக்கி சென்ற வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளானதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் செட்டிபாளையம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தினால் சிறிய ரக வாகனம் கடுமையான சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் விபத்து காரணமாக பிரதேசத்தில் மின்சார தடையும் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.