திடீரென தார் ரோட்டில் ஓடிய ட்ரெயின்! மக்கள் கூடி வேடிக்கை!

கடலூர் நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்திற்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து சர்க்கரை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று வந்தது. அங்கு வந்த சரக்கு ரயில் நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் பின்புறமாக எடுக்கும்போது இரண்டு பெட்டிகள் ரயில்வே தடுப்புகளை உடைத்து கொண்டு சுல்தான் பேட்டை என்ற நகரின் சாலையில் சாலைக்கு வந்தது.

ரயில் தார்சாலைக்கு வந்ததால் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல ரோட்டின் ஓரமாக ரயில் நின்றதால் தரைவழி போக்குவரத்தும் பாதிப்படையவில்லை. ரயிலில் இருந்து தண்டவாளத்தை விட்டு இறங்கிய பெட்டிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.