கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் வைத்து சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது

கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் வைத்து சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த பகுதியை சுற்றிவளைத்துதேடுதல் செய்தபொழுது டொல்பின் ரக வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, மீட்கப்பட்ட சங்கு பெரிய அளவில் இருப்பதுடன், இது இடம்புரி சங்கு என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு்பினும், வலம்புரிசங்கை கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் கடத்த முயன்றமை என்றே விசேட அதிரடிப்படையினர் நாளை வழக்குத்தாக்கல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட நபர்கள் கிளிநொச்சி பொலிஸார் மூலம் நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.