விஜயகலாவே என்னிடம் அப்படி கூறினார்! ரஞ்சன் திடீர் அறிவிப்பு

ஞ்சன் ராமநாயக்க செய்தியாளார்கள் முன்னிலையிலேயே விஜயகலாவிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பேசியிருந்தார்.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் இந்த செயற்பாட்டிற்கு விஜயகலா மகேஸ்வரன் கவலை வெளியிட்டிருந்தார்.

“ஒரு பெண்ணுக்கு ரஞ்சன் துரோகம் செய்திருக்கின்றார். அதுவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எப்படி துரோகம் செய்திருக்கின்றார் என்பதையே இந்த உலகம் அறிந்திருக்கின்றது” என விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்து பேசிய அவர்,

“தன்னுடனான தொலைபேசி உரையாடலை ஊடகங்களுக்கு வெளியிடுமாறு விஜயகலா மகேஸ்வரன் அந்த உரையாடலில் கூறியுள்ளார். அவருடனான அந்த உரையாடலை தர்மத்திற்கு முரணானது என ஒருபோதும் கூறமாட்டேன்.

அந்த சந்தர்ப்பத்தில் நான் ஒரு ஊடகவியலாளராகவே செயற்பட்டிருந்தேன். நான் மக்கள் முன்னிலையிலேயே அவரிடம் கேள்வி கேட்டிருந்தேன். சுமுகமாகவே அவருடன் பேசியிருந்தேன்.

ஒருபோதும் அவருக்கு அவதூறு கூறவோ அல்லது அவரது கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நான் செயற்படவில்லை” என மேலும் கூறியுள்ளார்.