தெல்லிப்பழையில் பதற்றம்- பற்றி எரிந்தது பனைமரக்காடு- தீயணைப்புப் படையினர் களத்தில்!!

தெல்லிப்பழைப் பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றில் தீ பரவல் ஏற்பட்டதில் அங்கிருந்த 50 க்கும் மேற்பட்ட பனைமரங்கள் பற்றி எரிந்தன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தெல்லிப்பழை 8 வட்டாரம் துர்க்காபுரத்தில் இன்று இந்தச் சம்பவம் நடைபெற்றது. வடலிகள் மற்றும் பனைமரங்களில் வேகமாகத் தீ பரவியது. உடனடியாக தீயணைப்புப் படையினருக்கும், பிரதேச சபையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

அங்கு விரைந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த காணிக்கு அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் குப்பைக்குத் தீ வைக்கும் போது இந்த இடர் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.