வவுனியாவில் பாதசாரிக்கடவையில் சென்றவரை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி

வவுனியாவில் பாதசாரிக்கடவையில் சென்றவரை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி

வவுனியா கண்டி வீதியில் இன்று காலை 9.30மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரிக்கடவையில் சென்று கொண்டிருந்தவரை மோதித்தள்ளியது முச்சக்கரவண்டி இதனால் பாதசாரிக்கடவையைக்கடக்க முற்பட்டவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை 9.30மணியளவில் கார்கில் பூட்சிட்டிக்கு மன்பாக உள்ள மஞ்சள் கடவையைக்கடக்க முற்பட்ட நபர் ஒருவரை வவுனியா நகரை நோக்கில் சென்ற முச்சக்கரவண்டி மோதியது இவ்விபத்தில் பாதசாரிக்கடவையைக்கடக்க முற்பட்ட நபர் சம்பவ இடத்தில் படுகாமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி அவரை மனைவி ஒருயதுடைய மகள் ஆகியோருக்கு தெய்வாதீனமாக எவ்வித காயங்களும் எற்படவில்லை. சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.