போக்குவரத்துக் குற்றங்கள்- புதிய தண்டப்பணம்- இன்று முதல் நடைமுறைக்கு!!

போக்குவரத்துக் குற்றங்களுக்காக அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் அறவீடு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் அறவீடு 23 வாகனக் குற்றங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது 33 தவறுகளை உள்ளடக்கும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைவாக குறைந்த பட்ச தண்டப் பணமாக 500 விதிக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.